கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவரையே கொன்றது "கொரோனா"...! பேரதிர்ச்சியில் சீனா..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 07, 2020, 04:19 PM IST
கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவரையே கொன்றது "கொரோனா"...!  பேரதிர்ச்சியில் சீனா..!

சுருக்கம்

சீனாவில் பெரும் வைரலாக பரவி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 563 பேர் உயிர் இழந்தனர்.

கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவரையே கொன்றது "கொரோனா"...!  பேரதிர்ச்சியில் சீனா..! 

கொரோனா வைரஸ் என்ற புது வைரஸ் தோன்றி, அதன் தாக்கம் அதிகரிக்கும் என முதன் முறையாக கண்டறிந்த மருத்துவர் அதே வைரஸ் தாக்கியதில் பரிதாபமாக உயிர் இழந்தார்

சீனாவில் பெரும் வைரலாக பரவி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 563 பேர் உயிர் இழந்தனர். இதற்கு முன்னதாக சீனா வூஹானில் உள்ள மருத்துவமனையில் லீ வென்லியாங் என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். 

அவரிடம் சிகிச்சைக்கு வந்த சிலர் தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியான வைரஸ் தாக்கம் இருப்பதையும், அது மிக கொடூரமான வைரஸாக உருவாக வாய்ப்பிருப்பதாகவும் அவர் கண்டறிந்து, சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு இருந்தார். 

கொரோனா எதிரொலி..! ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி ..! வாடும் சீன மக்கள்...!

ஆனால் சீன அரசோ இது குறித்து எதுவும் பேச கூடாது என வாயை அடக்கியது. இதன் காரணமாக தேவையான விழிப்புணர்வு கிடைக்காமல் போனது. இந்த ஒரு தருணத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு, லீ சிகிச்சை அளித்த போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியது. இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதே போல் தொடர்ந்து ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த மருத்துவர் சாங் யிங்கீ என்பவரும் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்