
தென்னிந்திய மக்களோட கலாச்சாரத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் , ஒரு சில முறைகள் என்றும் மக்களால் பின்பற்றப்படும் என்பதற்கான உதாரணம் தற்போது நடந்துள்ளது .
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் , அதாவது காதணி விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் உற்றார் உறவினர்களை அழைப்பது வழக்கம் .
அவ்வாறு விழாவிற்கு வரும்உற்றார் உறவினர்கள் பலரும், தங்களால் இயன்றதை அன்பளிப்பாக “ மொய்” என்ற பெயரில் பணத்தையோ அல்லது சற்று விலை உயர்ந்த பொருளையோ கொடுப்பார் .
இதே போன்று , மற்றவர்கள் வீட்டு விழாவிற்கு செல்லும் போது, இதற்கு முன்னதாக அவர்கள் தங்கள் வீட்டு விழாவிற்கு எப்படி மொய் செய்தார்களோ அதே போன்று அவர்களுக்கும் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு செய்யப்படும் அன்பளிப்பு “மொய்“ சில சமயத்தில் மறந்துக்கூடபோகும் . ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும் ,
டிஜிட்டல் இந்தியா கனவிற்கு ஏற்பவும் தற்போது மதுரை செக்கானூரணியில் இன்று நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதற்காக தனியாக ஒரு சாப்டுவேர் ரெடி செய்யப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.
இதன் மூலம், யாரெல்லாம் அன்பளிப்பு கொடுத்துள்ளார்கள் , எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என சுலபமாக தெரிந்துக் கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி நொடி பொழுதில், ஒட்டு மொத்தமாக எவ்வளவு பணம் அன்பளிப்பாக கிடைத்துள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும் .
இதன் மூலம் கலாசாரம் பழக்க வழக்கங்கள் மாறமால் , அனைத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது உறுதியாகிவிட்டது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.