சாதாரண ஜுரத்திற்கும் கொரோனா ஜுரத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 09, 2020, 02:59 PM IST
சாதாரண ஜுரத்திற்கும் கொரோனா ஜுரத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்..!

சுருக்கம்

சாதாரண ஜுரத்தில் அறிகுறிகளாக.. காய்ச்சல் தொண்டை வலி உடல் சோர்வு இவற்றுடன் மூக்கு ஒழுகுதல்/ அடைத்தல் இருக்கும். 

சாதாரண ஜுரத்திற்கும் கொரோனா ஜுரத்திற்கும் உள்ள வித்தியாசம் இது தான்..! 

நாடு முழுக்க பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம்  இந்தியாவிலும் பரவ தொடங்கி தற்போது வரை 42 பேர் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் 

பொதுவாகவே,காய்ச்சல் தலைவலி,வறட்டு இருமல், மூச்சுத்திணறல் இவை மூன்றும் கொரோனா பாதிப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதற்காக  காய்ச்சல் வந்தாலே  கொரோனா இருக்குமா என பயப்பட வேண்டாம். அப்படி என்றால் எதை வைத்து நமக்கு ஏற்பட்ட பாதிப்பு கொரோனா இல்லை என தெரிந்துகொள்வது தெரியுமா..? 

சாதாரணமாக வரும் ஜுரத்திற்கும், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்து என்ன வித்தியாசம் ??? 

சாதாரண ஜுரத்தில் அறிகுறிகளாக.. காய்ச்சல் தொண்டை வலி உடல் சோர்வு இவற்றுடன் மூக்கு ஒழுகுதல்/ அடைத்தல் இருக்கும். 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றில் மூக்கு அடைத்தல் / ஒழுகுதல் போன்ற நாசி சார்ந்த அறிகுறிகள்(5%) குறைவான மக்களிடமே தென்பட்டுள்ளது. 

மேலும் சாதாரண ப்ளூ ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் சரியாகி நீங்கி விடும். ஆனால் கொரோனா தொற்று இரண்டு வாரம் முதல் மூன்று வாரம் வரை நீளும். தீவிர தொற்று உடையவர்கள் குணமாக நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கூட ஆகியிருக்கிறது. இந்த அறிகுறிகளைக் காண்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உடனே மருத்துவர்களை அணுகுவது சிறப்பானது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்