மறந்தும் கூட இந்த பொருட்களை எல்லாம் யாரிடமும் தானமாக வாங்க வேண்டாம்..? மீறினால் தரித்திரத்தை ஏற்படுத்தும்..

By Pani MonishaFirst Published Aug 26, 2022, 10:05 AM IST
Highlights

Dhanam Vanga Koodatha Porutkal: எந்த பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது..அதேபோன்று, எந்த பொருட்களை இனமாக வாங்கக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

நம்முடைய வாழ்வில் தானம் கொடுப்பதும், இனமாக பொருட்களை வாங்குவதும் எல்லோரின் வாழ்க்கையில்  சந்தித்திருப்போம். ஆனால், எந்த பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது..அதேபோன்று எந்த பொருட்களை இனமாக வாங்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

உழைக்காமல் நம் கைக்கு வரக்கூடிய பொருள் நமக்கு சொந்தமில்லை. அதன்மூலம் நமக்கு லாபம் வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக நஷ்டம் வரும். எனவே, உழைக்காமல் சம்பாதித்த காசு, இனமாக வரும் பொருள், எதுவாக இருந்தாலும் முதலில் அதை வேண்டாம் என்று சொல்லி, நிராகரிக்க கற்றுக்கொள்ளுங்கள். காசு கொடுக்காமல் கிடைக்கின்றது என்பதற்காக, எது கிடைத்தாலும் வாங்கி வீட்டிற்குள் வைத்துக் கொள்பவர்களுக்கு கஷ்டமும் இனாமாக வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 மேலும் படிக்க..விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

அந்த வரிசையில், முதலில் யாரிடமிருந்தும் எவர்சில்வர் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை  வாங்க கூடாது. ஏனெனில், இந்த பொருட்களை மற்றவர் கையில் இருந்து பெற்றுக் கொண்டால், தானம் கொடுத்தவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டமும், துரதிஷ்டமும் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் என்ற ஒரு கருத்து உண்டு. அந்த காலத்தில்  நம்முடைய முன்னோர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வந்தனர்.

அதேபோன்று, உங்களுடைய வீட்டு விசேஷங்களில் உங்கள் வீட்டு சுப காரியங்களில், எவர்சில்வர் பாத்திரத்தை அன்பளிப்பாக கொடுப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. மாறாக நீங்கள் விசேஷங்கள் சுபநிகழ்ச்சிகள் என்றாலே வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மட்டை தேங்காயை தானமாக கொடுப்பது நல்லது.  இதனால் வாழ்வில் உங்களுக்கு வளம் கூடும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, நம் வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள் சுகமாகவே முடிவதற்கு, இந்த மங்களகரமான பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

 மேலும் படிக்க..விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

அதேபோன்று, இரும்பு சம்பந்தப்பட்ட கத்தி, அருவாமனை, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் எந்திரங்கள், இப்படிப்பட்ட பொருட்களை யாருக்கும் நீங்கள் தானமாகவும் கொடுக்கக்கூடாது.  தானமாகவும் பெறக்கூடாது. அதேபோன்று, அன்பளிப்பாகவும் கொடுக்க வேண்டாம். எனவே, உங்கள் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடாமல் இருக்க இந்த பொருட்களை எல்லாம் தானம் கொடுப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். 

 மேலும் படிக்க..விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

click me!