உண்மையை சொல்லி 'லீவ்' கேட்ட மாணவன்...!! - வைரலாகும் லீவ் லெட்டர்

 
Published : Mar 10, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
உண்மையை சொல்லி  'லீவ்' கேட்ட மாணவன்...!! - வைரலாகும் லீவ் லெட்டர்

சுருக்கம்

boy leave letter going viral

தேனி   மாவட்டம் வருஷ நாடு அருகில் உள்ள பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை  பள்ளியில்  ஏழாம் வகுப்பு  படித்து  வருகிறான். மிகவும் ஏழ்மையான  குடும்பத்தில் பிறந்த ஈஸ்வரன் தனக்கு  ஒரு நாள் பள்ளி  விடுமுறை  வேண்டும் என்பதற்காக  தன்னுடைய  ஆசிரியருக்கு  கடிதம் எழுதி , தன்னுடன் பயிலும் சக மாணவர்  ஒருவனிடம்   கடிதத்தை  கொடுத்து  அனுப்பி உள்ளார் .

ஈஸ்வரனின் விடுப்புகான  காரணம் அனைவரையும்  மெய் சிலிர்க்க வைத்துள்ளது . அதாவது பொதுவாகவே லீவ் எடுக்க வேண்டுமேன்றால், ஏதாவது  ஒரு பொய்  சொல்வதே வழக்கம் . ஆனால் ஈஸ்வரனோ “ என்  அம்மாவிற்கு  உடல் நிலை  சரியில்லாத  காரணத்தால் , கால்நடைகளை கவனித்துக்கொள்ள இன்று ஒரு நாள்  விடுப்பு வேண்டுமென , அந்த  மாணவன்  கடிதத்தில்   குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்வரனின்  லீவ்  லெட்டர் தற்போது வைரலாக பரவி வருகிறது. உண்மையை சொல்லி விடுப்பு கேட்ட ஈஸ்வரனை  பாராட்டி , மாணவர்கள்  மத்தியிலும்  ஆசிரியர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்