கடவுளே இது மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. வாய் மூலம் ஆக்சிஜன் அளித்து கணவரை காப்பாற்ற போராடிய மனைவி.!

Published : Apr 27, 2021, 12:49 PM IST
கடவுளே இது மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. வாய் மூலம் ஆக்சிஜன் அளித்து கணவரை காப்பாற்ற போராடிய மனைவி.!

சுருக்கம்

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் மூச்சுத் திணறல் அவதிப்பட்ட கணவருக்கு  மனைவி வாய் வழியாக சுவாசம் அளித்து காப்பாற்ற போராடியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் மூச்சுத் திணறல் அவதிப்பட்ட கணவருக்கு  மனைவி வாய் வழியாக சுவாசம் அளித்து காப்பாற்ற போராடியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அப்படி இருந்த போதிலும் மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்தியாவில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு  உலக நாடுகள் பலவும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு  (47) கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆட்டோ மூலம், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது மனைவி அழைத்து வந்திருந்தார்.

கணவரின் உடல்நிலை மேலும் மோசடைந்ததால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆட்டோவில், தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்ஸிஜன் அளித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் கதறி துடித்த மனைவியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்