விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்: பிப்., 1, 2 ஆம் தேதியில் நேரடியாக பார்க்கலாம்!

Published : Jan 12, 2023, 05:59 PM IST
விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரம்: பிப்., 1, 2 ஆம் தேதியில் நேரடியாக பார்க்கலாம்!

சுருக்கம்

கிட்டத்தட்ட 50000 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் தோன்றும் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் கூட காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதை கண்டுபிடித்தனர். அதாவது, பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று 50000 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வருவதாக அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். இந்த பச்சை நிற வால் நட்சத்திரத்திற்கு சி/2022 ஈ3 (இசட்.டி.எஃப்) என்று நாசா பெயர் வைத்துள்ளது.

தண்ணீர் குடிக்க பயந்தால்.. ஆயுட்காலம் குறையும் - தெரியுமா உங்களுக்கு..?

இந்த அரிய வகையான பச்சை நிற வால் நட்சத்திரமானது இந்த மாத கடைசியிலோ அல்லது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் பூமிக்கு மிக அருகிலேயே தென்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி நம்மால் வெறும் கண்ணால் கூட காண முடியும் என்றும், பகலில் தொலைநோக்கி கருவி (பைனாக்குலர்) கொண்டும், இரவில் வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவேகானந்தர் ஜெயந்தி: வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் பொன்மொழிகள்!

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. சூரியனைச் சுற்றிலும் ஒரு சுற்றுப் பாதையை இந்த வால் நட்சத்திரம் கொண்டுள்ள நிலையில், பூமியை சுற்றி வர அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
Peanut Tips : வேர்க்கடலை விரும்பியா? இந்த '6' விஷயங்கள் உங்களுக்குதான்!