மரத்தின் உச்சியில் இருப்பது பேயா..? உச்சி வெயிலில் எடுத்த வீடியோவாம்..!

First Published Mar 10, 2018, 6:22 PM IST
Highlights
a devil is on tree video source


மரத்தின் உச்சியில் இருப்பது பேயா..? உச்சி வெயிலில் எடுத்த  வீடியோ...

பேய் பிசாசு என்றாலே நமக்கு நடிப்பாக ஒரு விதமான பயத்தை கொடுக்கும் அல்லவா...? சிறு வயதிலியே ஏதோ விபத்து  மூலமாகவோ அல்லது நிறைவேறாத ஆசையுடனோ யாராவது இறந்து இருந்தால்,அவர்களுடைய ஆன்மா இந்த பூமியில் சுற்றிக்கொண்டே இருக்கும் என பலரும் சொல்வதை கேட்டு இருப்போம் அல்லவா...?

அதே வேளையில்,வயதானவர்கள் இயற்கை மரணம் அடைந்து இருந்து இருந்தால் பேய் பிசாசு என பேசுவது குறைவு தான்...

பொதுவாகவே யார் இறந்தாலும்,கலாச்சார முறைப்படி சாங்கியம் சம்பிரதாயம் செய்வது வழக்கம்...

அதாவது, ஒருவர் இறந்தபின் குறிபிட்ட சில நாட்களில் காரியம் செய்வார்கள்...அவ்வாறு செய்தால் இறந்தவர்கள், ஏற்கனவே இறந்த பெரியவர்களிடம் சேர்ந்து  விடுவார்கள் என்பது ஐதீகம்.

இந்நிலையில்,ஒரு மரத்தின் உச்சியில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பது போல்  உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....

உண்மையில் பேய் என்பது  உண்மைதானா...? என்பதற்கு இதுவரை பதில் தெரியாமல்  உள்ளது...

 அதே போன்று இது உண்மையில் தோன்றிய பிம்பம் தானா..? என்பது தெரியாமல்  பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!