கடவுளின் நாட்டில் 14 மாவட்டங்களில் 8 ஆட்சியாளர்கள் பெண்களே..!!

By Kalai SelviFirst Published Jun 2, 2023, 8:10 PM IST
Highlights

ஒரு பெண் அடிமையாக இருந்த காலம் போய்விட்டது. அவளால் எதையும் சாதிக்க முடியும் என்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். அந்த வகையில், கடவுளின் நாடு என்று கூறப்படும் கேரளாவில் நம்மை  ஆச்சரியப்படும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

ஒரு பெண் தன் மனதில் நினைத்த எதையும் செய்ய முடியும். அவள் எல்லாத் துறைகளிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியைத் தரக்கூடியவள். பெண் அடிமையாக இருந்த காலம் போய் எதையும் 
சாதிக்க முடியும் என்ற காலகட்டத்திற்கு வந்துவிட்டால்.கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். இந்நிலையில் நம் நாட்டில் கடவுளின் நாடு என்று கூறப்படும் கேரளாவில், 14 மாவட்டங்களில் தற்போது 8 மாவட்டத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியாளர்களாக உள்ளனர்.

ஒரு காலத்தில் அதிகாரம் ஆண்களின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதுபோலவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆண்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பெண்களும் அரசு உயர் பதவிகளில் உள்ளனர். மாவட்டம், மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக கைகோர்க்க துணிந்தனர்.

இதற்கு தெளிவான உதாரணம் கேரள மாநிலம். இம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில், 8 மாவட்டங்களில் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக உள்ளனர். நம் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனந்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களின்  நிர்வாகக் கட்டுப்பாடு பெண் மாவட்ட ஆட்சியர்களின் கைகளில் உறுதியாக உள்ளது.

இதையும் படிங்க: நீங்கள் அதிக நேரம் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க! இனி தூங்க மாட்டீங்க..!!

ஆம், கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில், 8 மாவட்ட ஆணையர்கள் பெண்களே. நவ்ஜோத் கோசா, அப்சானா பர்வீன், திவ்யா ஐயர், பிகே ஜெயஸ்ரீ, ஷீபா ஜார்ஜ், ஹரிதா, மிருண்மயி ஜோஷி, கீதா போன்ற பெண்கள் இந்த மாவட்டங்களில் நிர்வாகத்தை வழிநடத்தும் மாவட்ட ஆட்சியர்கள் ஆவர். உயர்மட்ட நிர்வாகப் பதவிகளில் பெண்களின் இருப்பு சமூகத்தில் பெண்களுக்கு நட்பான கண்ணோட்டத்தை உருவாக்க உதவுகிறது.

நாட்டின் பல பகுதிகளில், அனைத்து பெண்களும் அரசியல், சிவில் சர்வீசஸ், பாதுகாப்பு மற்றும் பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் குறைவாக உள்ள நாட்டில் இது ஒரு அரிய சாதனை. இதனுடன், மாநில நிர்வாகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களின் தலைமையில் உள்ளது. மாநில சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33% இருந்த நிலையில், தற்போது கேரளாவில் நிர்வாகப் பணிகளில் பெண் அதிகாரிகள் 71.4 சதவீதமாக உள்ளனர்.

click me!