முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்கள்.. அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

By Ramya sFirst Published Jul 5, 2023, 1:58 PM IST
Highlights

முகேஷ் அம்பானி வீட்டின் பணியாளர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி மும்பையின் மிக விலையுயர்ந்த பள்ளியான திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனர் ஆவார். அம்பானி குடும்பத்தை பற்றி ஏதேனும் ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அம்பானி வீட்டின் பணியாளர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டிலியா என்று அழைக்கப்படும் அம்பானியின் வீடு உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். 27 மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஷ்லோகா அம்பானி உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடி என்று கூறப்படுகிறது.

அம்பானியின் இந்த ஆடம்பர் வீட்டில் சமையல், பராமரிப்பு பணிகள், கார் ஓட்டுனர் என சுமார் 600 பேர் வேலை செய்கின்றனர். அம்பானி குடும்பத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் லட்சங்களில் உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன், உணவு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் காப்பீடு மற்றும் கல்வி உதவித்தொகையையும் வழங்குகின்றனர்.

அதாவது அம்பானி வீட்டின் பணியாளர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ.24 லட்சம் பெறுகிறார். அம்பானி வீட்டில் பணிபுரியும் சில வேலைக்காரர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

அம்பானி குடும்பத்திற்கு 500 வாகனங்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஓட்டுநர் முகேஷ் அம்பானி அல்லது அம்பானி குடும்பத்தில் டிரைவராக பணிக்கு சேர முடியும்.

ஆனால் அம்பானியின் இடத்தில் டிரைவர் அல்லது வேறு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு ஓட்டுநரின் வேலைக்கு, நிறுவனத்தால் கடுமையான சோதனை எடுக்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவருக்கு வேலை கிடைக்கும். டிரைவரை தேர்ந்தெடுக்கும் போது, சம்பந்தப்பட்ட டிரைவர் வழியில் உள்ள பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார் என்பது உள்ளிட்ட பல கடினமான சோதனைகள் உள்ளன.

அம்பானி குடும்பத்தின் ஓட்டுநர்கள் பல சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான டெண்டர் நம்பகமான நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டிரைவரை பல சோதனைகள் செய்து, அம்பானி குடும்பத்தின் வீட்டில் வேலைக்குச் சென்று அனுப்புகிறது.

இதே போல் அம்பானி குடும்பத்தின் பணியாளர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இருந்தே அவர்கள் அம்பானி குடும்பத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். குடும்பத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில், அவர் பொது அறிவு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதுதான் உலகின் விலையுயர்ந்த தக்காளி விதை .. ஒரு கிலோ ரூ.3 கோடியாம்!

click me!