துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..! மதுரையில் பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

thenmozhi g   | Asianet News
Published : Feb 27, 2020, 05:13 PM IST
துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..!  மதுரையில்  பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

சுருக்கம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.

துடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்..!  மதுரையில்  பரபரப்பு..! மோசமான நிலையில் 10 பசுக்கள்..?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது செட்டியபட்டி என்ற ஊர். இங்கு உள்ள நடு பட்டியை சேர்ந்தவர் மனோகரன் என்ற நபர். இவர் காலங்காலமாக மாடு வளர்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். மேலும் பால் கறவை தொழில் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பாராத சுமார்  10 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில் பண்ணையில் இருந்து 53 நாடுகளில் 40 மாடுகள் தீயில் சிக்கியது. அதில் 30 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 10 மாடுகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து உள்ளனர். இதுகுறித்து கோட்டாட்சியர் சௌந்தர்யா, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்