பக்தர்கள் மட்டுமல்ல... கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் காவலர்களும் மயங்கி விழும் சோக காட்சி ..!

Published : Jul 20, 2019, 06:25 PM IST
பக்தர்கள் மட்டுமல்ல... கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் காவலர்களும் மயங்கி விழும் சோக காட்சி ..!

சுருக்கம்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்றோடு 20 நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்றோடு 20 நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது.

கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அறநிலையத்துறையும் சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நான்கு பேர் பரிதாபமாக மூச்சுதிணறி உயிரிழந்தனர். பின்னர் நேற்று எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கியது அறநிலையத்துறை. இதன் மூலம் ஆன்லைனில் ரூபாய் 300 செலுத்தி மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசனம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், காலை முதல் இரவு வரை போராடி வரும் காவலர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு மயங்கி விழுந்த இரண்டு காவலர்களுக்கு அங்கிருந்த மக்கள் உணவளித்து அவர்களுக்கு உதவி செய்யும் இந்த போட்டோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்