கனமழை எச்சரிக்கை..! தமிழக மக்கள் குஷியோ குஷி..! குடையை ரெடியா வெச்சுக்கோங்க..!

Published : Jul 20, 2019, 05:42 PM IST
கனமழை எச்சரிக்கை..!  தமிழக மக்கள் குஷியோ குஷி..! குடையை ரெடியா வெச்சுக்கோங்க..!

சுருக்கம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்கு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்கு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பம்பை ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஆலப்புழாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தின் நிலை..! 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையின் நிலை..! 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்