
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ்சிங் தன் கால்களால் தேர்வு எழுதி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் .
தற்போது, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது . இந்த தேர்வை தன்னுடைய கால்களால் எழுதிய காட்சி அனைவரையும் நெகிழ செய்துள்ளது .
பிளஸ்சிங் பிறக்கும் போதே ,கைகள் இல்லாமல் தான் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே, தன்னுடைய கால்களை பயன்படுத்தி செய்து கொள்ளும் அளவிற்கு, பழகி இருக்கிறார்.
பிளஸ்சிங் 1௦ வகுப்பு தேர்வில் 386 மதிப்பெண்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மாணவனின் தன்னம்பிக்கையை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.