1100 பயன்படாதஆழ்துளை கிணறுகள் அதிரடி மூடல்! வெறும் 3 நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர் மகேஸ்வரி...!

Published : Oct 29, 2019, 04:54 PM ISTUpdated : Oct 29, 2019, 05:10 PM IST
1100 பயன்படாதஆழ்துளை கிணறுகள் அதிரடி மூடல்! வெறும் 3 நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர் மகேஸ்வரி...!

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும் பயன்படாத 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார் 

1100 பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அதிரடி மூடல்! வெறும் 3 நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர் மகேஸ்வரி...!

சிறுவன் சுர்ஜித் இழப்பிற்கு பிறகு தமிழகம் முழுவதிலும் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு சார்பிலும், தன்னார்வலர்களும் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அவரவர் ஊரில் உள்ள பாதுகாப்பற்ற மூடப்படாத ஆழ்துளை கிண்றுகளை தொடர்ந்து மூடி வருகின்றனர். 

அவ்வாறு மூடப்படும் ஆழ்துளை கிணறு குறித்த புகைப்படங்கள் மற்றும் விவரத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும்  பயன்படாத 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார் 

இது தவிர்த்து, மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் பற்றி 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தவிர்த்து அரசு நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் ஆழ் துளை கிணறு அமைக்க வேண்டும் என்றால் எழுத்து பூர்வமாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு தான் அமைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்