ஏசி பெட்டிகள் ஏன் ரயிலின் நடுவில் மட்டும் இருக்கின்றன? இதுதான் காரணமா?

Published : Jul 08, 2023, 03:09 PM IST
ஏசி பெட்டிகள் ஏன் ரயிலின் நடுவில் மட்டும் இருக்கின்றன? இதுதான் காரணமா?

சுருக்கம்

வசதியான, பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் பொது மக்களுக்கு பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாக ரயில்வே உள்ளது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நெட்வொர்காக ரயில்வே உள்ளது. வசதியான, பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் ரயில்வே மற்றும் ரயில்கள் பற்றி பலருக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அப்படி ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இன்று பார்க்க போகிறோம். நூங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால், நீண்ட தூர ரயில்களில் எப்போதும் ரயிலின் நடுவில் ஏசி பெட்டிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.

ஸ்லீப்பர் பெட்டிகளை தொடர்ந்து என்ஜினுக்குப் பிறகு ஜெனரல் பெட்டிகள் அமைந்திருக்கும். எல்லா ரயில்களிலுமே, ரயிலின் நடுவில் ஏசி பெட்டிகள் உள்ளன, அதைத் தொடர்ந்து சில ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பொது பெட்டிகள் உள்ளன. ஆனால், ஏசி பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

மூளையை உண்ணும் அமீபாவால் கேரள சிறுவன் உயிரிழப்பு.. இந்த ஆபத்தான அமீபா எப்படி மனிதர்களை பாதிக்கும்?

இந்திய ரயில்வே இந்த முடிவுக்கு குறிப்பிட்ட காரணத்தை குறிப்பிடவில்லை, ஆனால் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை எளிதாக்குவதே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லக்கேஜ் பெட்டிகள், அதைத் தொடர்ந்து ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் ரயிலின் இருபுறமும் இருப்பதால், பெரும்பாலான கூட்டம் பிரிந்து செல்வதால், நடுவில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் குறைவான கூட்டத்தையே எதிர்கொள்வார்கள்

மேலும் ரயில் நிலையங்களின் வெளியேறும் வாயில்கள் நிலையத்தின் நடுவே அமைந்திருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதனால், ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணிகள், லக்கேஜுடன் பயணிக்கும் போது, எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஏசி பெட்டிகள் வெளியேறும் வாயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில், நீராவி என்ஜின்கள் இருந்தபோது, இன்ஜினுக்கு அருகில் ஏசி பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், இன்ஜின் சத்தத்தால் ஏசி வகுப்பில் பயணம் செய்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதைக் கருத்தில் கொண்டு, ஏசி பெட்டிகள் எஞ்சினுக்கு அருகே இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

கேசிஆர் தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைக்கிறார், மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை: பிரதமர் மோடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!