இந்திய ரூபாய் நோட்டுகள் & நாணயங்கள் எப்படி உருவாகிறது தெரியுமா ? இவ்வளவு ரூல்ஸ் இருக்கா ?

Published : Oct 28, 2022, 03:50 PM IST
இந்திய ரூபாய் நோட்டுகள் & நாணயங்கள் எப்படி உருவாகிறது தெரியுமா ? இவ்வளவு ரூல்ஸ் இருக்கா ?

சுருக்கம்

இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அரவிந்த் கெஜ்ரிவால்:

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் சரிக்கு சரியாக போட்டி ஏற்பட்டுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லட்சுமி, விநாயகர் படம்:

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் ரூபாய் நோட்டு குறித்து பேசி பாஜக வட்டாரத்தையே கதிகலங்க வைத்துள்ளார். ‘ரூபாய் நோட்டுகளில் இந்துக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட வேண்டும்’ என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்து பரபரப்பை உண்டாக்கினார்.

இந்திய ரூபாய் நோட்டுகள்:

இந்திய நாணயத் தாள்களின் வடிவமைப்பை உருவாக்கும் முழு அதிகாரம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு உள்ளது. ரூபாய் நோட்டின் வடிவமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் மைய வாரியத்தால் அங்கீகரிக்கப்படும்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

RBI சட்டம், 1934 இன் பிரிவு 25 இன் படி, பங்கு நோட்டுகளின் வடிவமைப்பு, வடிவம் மற்றும் பொருள் ஆகியவை மத்திய வாரியத்தின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு (மத்திய அரசு) அங்கீகரிக்கப்படலாம். ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மைத் துறையானது நாணய மேலாண்மை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கடமைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது.

ரிசர்வ் வங்கி:

நோட்டுகள் மற்றும் நாணயங்களை வெளியிடுவது மற்றும் புழக்கத்தில் இருந்து பொருத்தமற்ற நோட்டுகளை மீட்டெடுப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும். ரிசர்வ் வங்கியின் 18 வெளியீட்டு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மற்றும் அரசு கருவூலங்களால் நிர்வகிக்கப்படும் 4,195 நாணய பெட்டிகள், 488 களஞ்சியங்கள் மற்றும் 3,562 சிறிய நாணயக் கிடங்குகள் ஆகியவற்றின் பரந்த நெட்வொர்க் மூலம் இந்த வேலை செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் வடிவமைப்பு:

ரூபாய் நோட்டின் வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மைத் துறைதான் அதைச் செய்யும். வடிவமைப்பை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பும் முன், அதை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புகிறது. கரன்சி நோட்டு வடிவமைப்பின் இறுதி நடுவர் மையமாக இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னது ஈசியாக இருந்தாலும், அதை செயல்முறைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க..ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PAN Card Rules: ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு புது ரூல்ஸ்! இனி ஆதார் மட்டும் போதாது!
Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்