நெருங்கும் குஜராத் தேர்தல்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

Published : Nov 28, 2022, 09:42 PM ISTUpdated : Nov 29, 2022, 10:04 AM IST
நெருங்கும் குஜராத் தேர்தல்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

சுருக்கம்

குஜராத்தில் டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. 

குஜராத்தில் டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது, ஆனால் இந்த முறை பாஜக, ஆம் ஆத்மி கட்சி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் புதிய தோற்றம் கொண்ட காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். 2017 தேர்தலில், குஜராத்தில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையும் படிங்க: சபரிமலைக்கு செல்ல வாராந்திர சிறப்பு ரயில்… பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு!!

இந்த முறை காங்கிரஸ் 28-36 இடங்களைக் கைப்பற்றும் அதே வேளையில் ஆம் ஆத்மி மாநிலத்தில் தனது கணக்கைத் திறந்து 7-15 இடங்களைக் கைப்பற்றும். வாக்குப் பங்கின் அடிப்படையில், பாஜக 45.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 குஜராத் தேர்தலில் பெற்றதை விட 3.2 சதவீதம் குறைவாகும். மாநிலத்தில் காங்கிரஸ் 26.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க: மகனுடன் இணைந்து கணவனை பத்து துண்டுகளாக வெட்டிக் கொன்ற பெண்; மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!