
சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் நெரிசலான கோவிலில் ஒரு "பயங்கரவாதியை" திட்டுவதையும், அறைவதையும் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவின் துலேயில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், 35 வயதான பிரசாந்த் குல்கர்னி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், முகமூடி அணிந்த 'பயங்கரவாதி'யை அணுகுவதைக் காணலாம், அவர் ஒரு பக்தரை துப்பாக்கி முனையில் வைத்திருந்தார். பிரசாந்த் குல்கர்னியின் சொந்த மகள் அழத் தொடங்கும் அதே வேளையில், குற்றவாளிகளின் திடீர் நுழைவு குழந்தைகளையும் பெண்களையும் பயமுறுத்தியது.
கோபமடைந்த பிரசாந்த் குல்கர்னி, 'பயங்கரவாதி'யிடம் நடந்து சென்று, "உனக்கு மூளை இருக்கிறதா" என்று கத்தினார். ஒரு வினாடிக்குள், அவர் 'பயங்கரவாதி'யை இரண்டு முறை அறைந்தார். சம்பவம் நடந்த உடனேயே, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர். அப்போது தான் என்ன நடந்தது என்பது பிரசாந்த் குல்கர்னிக்கு தெரியவந்தது. போலீசார் நடத்திய பயிற்சி ஒத்திகை என்பது, அவர்கள் 'பயங்கரவாதிகள்' போல் வேடமிட்டது காவல்துறையினர் என்பதும் தெரியவந்தது. தான் அறைந்தது போலீஸ் அதிகாரியை என்பதும் பிரசாந்த் உணர்ந்தார்.
துலேயின் தேவ்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் நுழைவது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கும் அழைப்பு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வீடியோ வைரலானவுடன், முகமூடி அணிந்த நபர் உண்மையான பயங்கரவாதியாக இருந்திருந்தால், எதிர்கொள்ளவும் அறையவும் எந்த நபருக்கும் தைரியம் இருந்திருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பயமுறுத்தும் பயிற்சி குறித்து சிலர் கவலை தெரிவித்தனர்.
“ஹலோ, வனத்துறையா.. இவரு பாம்புகளை வைத்து என்ன பன்றாரு பாருங்க..” வைரல் வீடியோ