உத்தரப்பிரதேசத்தில் பந்தாவாக சேரில் அமர்ந்திருக்கும் ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரல் வீடியோ!!

Published : Jul 28, 2022, 02:40 PM IST
உத்தரப்பிரதேசத்தில் பந்தாவாக சேரில் அமர்ந்திருக்கும் ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரல் வீடியோ!!

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் மாணவனை மசாஜ் செய்யச் சொன்ன ஆசிரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவனை மசாஜ் செய்யச் சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது போகரி ஆரம்பப் பள்ளி. இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் ஆசிரியை ஊர்மிளா சிங், மாணவர்களுக்கு படிப்பை கற்பிக்காமல். தனக்கு மசாஜ் செய்யுமாறு மாணவனை மிரட்டியுள்ளார். மாணவனும் பயந்து, அவருக்கு கையில் மசாஜ் செய்துள்ளார்.  

இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்துக் கொண்டு சேரில் அமர்ந்து இருக்கிறார் ஆசிரியை ஊர்மிளா. மாணவன் ஒருவர் அவருக்கு கையில் மசாஜ் செய்து விடுகிறார். ஆர்வமாக தண்ணீர் குடிக்கிறார் ஆசிரியை. தனக்கு மசாஜ் செய்யும் மாணவனிடம் அவ்வப்போது பேசிக் கொண்டும் இருக்கிறார். 

ஒரு மாணவர் ஆசிரியை ஊர்மிளாவுக்கு மசாஜ் செய்து கொண்டு இருக்கும்போது மற்ற மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே செல்கின்றனர். அவருக்கு மசாஜ் செய்வதையும் வேடிக்கை பார்க்கின்றனர்.  இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் தேதி நடந்துள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!