சபரிமலை மேல் சாந்தியாக உன்னி கிருஷ்ணன் தேர்வு!

Asianet News Tamil  
Published : Oct 17, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சபரிமலை மேல் சாந்தியாக உன்னி கிருஷ்ணன் தேர்வு!

சுருக்கம்

Uani Krishnan selected as Sabanti

சபரிமலையில் நேற்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது.

நேற்று காலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும், வழக்கமான பூஜைகள் நடைபெற்றன . காலை 8 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது.

இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி , மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உன்னிகிருஷ்ணன் வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறந்து தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான்.. டிரம்புகாக வளைந்த ஷெரீப்..! மக்கள் கடும் எதிர்ப்பு..!