எகிறிய கொரோனா.. அதிர்ச்சியில் மக்கள்.. இன்று ஒரே நாளில் 16,159 பேருக்கு தொற்று பாதிப்பு

By Thanalakshmi VFirst Published Jul 6, 2022, 12:36 PM IST
Highlights

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 13,086 ஆக இருந்த நிலையில், இன்று 16,159 ஆக அதிகரித்துள்ளது. 
 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 13,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 16,159 ஆக சற்று அதிகரித்துள்ள்து.. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,34,723 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கொரோனா… ஒருவர் உயிரிழப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 15,394 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,07,327 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,15,212 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,270 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.21 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.26 % ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.53 % ஆக உள்ளது. இந்தியாவில் 198.20 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,95,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு திடீர் சரிவு.. உயிரிழப்பும் குறைவு.. நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்.!

click me!