பிறந்த குழந்தைகளுக்கும் உடனடி ஆதார்... - அதிரடி திட்டத்தை கையில் எடுக்கும் தெலுங்கானா அரசு...!

Asianet News Tamil  
Published : Dec 02, 2017, 08:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
பிறந்த குழந்தைகளுக்கும் உடனடி ஆதார்... - அதிரடி திட்டத்தை கையில் எடுக்கும் தெலுங்கானா அரசு...!

சுருக்கம்

The Telangana government has decided to actively implement the Aadhaar program for the newborns.

பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் வழங்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.  

வங்கி கணக்கு, அரசு மானியங்கள், லைசென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கிய ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியம் என்பதால், ஆதார் அட்டை எடுத்துக்கொள்வது அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை சுமார் 115 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் தெலங்கானா அரசு மும்முரம் காட்டி வருகிறது. மாவட்ட தலைநகரங்கள், தாலுகாக்களில் நிரந்தர ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆதார் எடுப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்து சில மணி நேரத்துக்கு பின் குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. 

இதனுடன் பெற்றோரின் புகைப்படங்கள், கைரேகை ஆகியவையும் சேர்த்து குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் ஆதார் அட்டையும் வழங்கப்படுகிறது. 
இந்த அட்டையை 5 வயது வரை பயன்படுத்தலாம். பின்னர், பழைய அட்டையை ஆதார் மையங்களில் கொடுத்து, குழந்தையின் பெயர், கைரேகையை பதிவு செய்து புதிய அட்டையை வாங்கிக் கொள்ளலாம். 

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!