தேர்தல் பரப்புரையில் தெலுங்கானா BRS எம்பிக்கு கத்திக்குத்து.. அடையாளம் தெரியாத நபரை தாக்கிய கிராம மக்கள்..

Published : Oct 30, 2023, 04:19 PM IST
தேர்தல் பரப்புரையில் தெலுங்கானா BRS எம்பிக்கு கத்திக்குத்து.. அடையாளம் தெரியாத நபரை தாக்கிய கிராம மக்கள்..

சுருக்கம்

தேர்தல் பரப்புரையில் தெலுங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் எம்பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத நபரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.

பிஆர்எஸ் டுப்பாக் வேட்பாளரும், எம்பியுமான கோத்தா பிரபாகர் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்டார்.  இதில் பலத்த காயமடைந்த பிரபாகர் ரெட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேடக் எம்.பி.யும், துப்பாக்காவின் பிஆர்எஸ் வேட்பாளருமான கோத்தா பிரபாகர் ரெட்டி, தௌலதாபாத் மண்டலம் சூரம்பள்ளி கிராமத்தில் இன்று (திங்கள்கிழமை) பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபரால் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டார்.

உடனே கஜ்வெல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகர் ரெட்டி, அங்கிருந்து ஹைதராபாத்க்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது. இதற்கிடையில், ஒரு கூட்டத்தினரால் தாக்கப்பட்ட நபரை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். 

அவர் செப்பியலா வில்லேவை சேர்ந்த ராஜு என தெரியவந்தது. அவர் முன்பு உள்ளூர் செய்தி செயலியில் நிருபராக பணிபுரிந்தார். இப்போது யூடியூப் சேனலில் பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி ஹரீஷ் ராவ் எம்பியை தொடர்பு கொண்டு பேசினார். தேவைப்பட்டால் பிரபாகர் ரெட்டியை ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கம்யூனிஸ்ட்டை மண்ணை கவ்வ வைத்த காங்கிரஸ்..! கேரள உள்ளாட்சித் தேர்தலில் அதிர்ச்சி திருப்பங்கள்
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!