10 வயது தன் சொந்த தங்கைக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல்..!

By thenmozhi gFirst Published Sep 1, 2018, 1:56 PM IST
Highlights

ஹரியானா மாநிலத்தில், பலாம் விஹாரில்  உள்ள ஒரு கிராமத்தில் சொந்த அண்ணனே தங்கைக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில், பலாம் விஹாரில்  உள்ள ஒரு கிராமத்தில் சொந்த அண்ணனே தங்கைக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள கார்டர்புரி கிராமத்தில் வசித்து வந்த 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவருடைய சொந்த அண்ணனான 22 வயதான நபர், தங்கள் பெற்றோர் வெளியில் சென்று இருந்த போது, தன் தங்கைக்கு மது ஊற்றி குடிக்க வைத்து உள்ளார்.

பின்னர் அந்த சிறுமியை பலமாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். பின்னர் சத்தம் போட்ட சிறுமியால் அந்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். உண்மை நிலவரதி அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

click me!