“மீண்டும் சிக்கலில் சிக்கிய சல்மான் கான்” – நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 04:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
“மீண்டும் சிக்கலில் சிக்கிய சல்மான் கான்” – நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

சுருக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இதில், சல்மான்கான் சுட்டதால் சின்காரா, கலைமான் வகைகளை சேர்ந்த 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சல்மான்கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, சல்மான் கானின் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது. 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!