சபரிமலையில் பெண்கள்! விரட்டி அடிக்க படையெடுக்கும் கேரள இளைஞர்கள்! அதிரவைக்கும் வீடியோ!

Oct 17, 2018, 7:32 PM IST

கடந்த மாதம் உச்ச நீதி மன்றம் அனைத்து வயது பெண்களும்... சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.

இதனால் இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதால் ஐயப்பன் ஸ்வாமியை தரிசிக்க , ஆண் பக்தர்கள் மட்டும் இன்றி பெண் பக்தர்கள் பலரும் சரணம் கோஷம்யிட்டு சபரி மலை எற தயாராகினர்.

ஆனால் பெண் பக்தர்கள் யாரையும் மலை எற விட கூடாது என்பதில் கேரள பக்தர்கள் குறியாக உள்ளனர்.  இன்று சபரிமலை கோவிலில்   நுழைய முயன்ற  மாதவி என்கிற பெண்ணின் காலில் விழுந்து அவரை அங்கிருந்து வெளியேற்றினார். 

சில பெண்கள் கோவில் உள்ளே முயன்று போராட்டத்திலும் குதித்தனர். மேலும் ஒரு நிலையில் நிலக்கல் பகுதியில் போராட்டம் வெடித்தது.

ஐயப்பன் கோவில் உள்ளே நுழைய பெண்கள் பலர் திரண்டு வருவதால், அவர்களை விரட்ட, கேரளாவை சேர்ந்த இளைஞகர்கள் பலர் அவர்களை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் அங்கு விரைந்து உள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் நிலக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.