ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..

Published : Oct 15, 2022, 01:10 PM IST
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..

சுருக்கம்

புதுச்சேரியில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 34 சதவீதமாக இருந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளதால் 38% ஆக உள்ளது.   

கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:லஞ்ச ஒழிப்புத்துறை மெகா ரெய்டு.. கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல்.. தலையை சுற்ற வைக்கும் வசூல் வேட்டை..

இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்களுக்கான 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை புதுச்சேரி நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 34 சதவீதமாக இருந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளதால் 38% ஆக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது  கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய மாகாணங்களின் நிர்வாக தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து விவரம் அரசு தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பரந்தூர் விமான நிலையம்.. 13 கிராம மக்கள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்..

PREV
click me!

Recommended Stories

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!