மகா கும்பமேளா 2025 சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பேசி வரும் பிரதமர் மோடி!

MahaKumbh Mela 2025 : பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நள்ளிரவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டறிந்து உதவிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

PM Narendra Modi Spoke with CM Yogi Adityanath about the Prayagraj MahaKumbh Mela 2025 Situation rsk

MahaKumbh Mela 2025 : உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 2025 மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை காரணமாக செவ்வாய்-புதன் நள்ளிரவில் இரவு 2 மணி அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார். நிலைமை குறித்து கேட்டறிந்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க உத்தரவிட்டார். பிரதமர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசியுள்ளார்.

இந்தியாவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சல்.! அசத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

Latest Videos

கும்பமேளா சிறப்பு நிர்வாக அதிகாரி ஆகாஷா ராணா கூறுகையில், சில தடுப்புகள் உடைந்ததால் "நெரிசல் போன்ற" சூழ்நிலை ஏற்பட்டது, இதனால் மக்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

10 கோடி பேர் கும்பமேளாவில்

புதன்கிழமை மௌனி அமாவாசை. இந்த நாளில் ஷாஹி ஸ்நானம் நடைபெற இருந்தது. இதற்காக சுமார் 10 கோடி பேர் கும்பமேளாவுக்கு வந்திருந்தனர். அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது. பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மௌனி அமாவாசையில் பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு பக்தர்களின் வருகை அதிகம்: அயோத்திக்கு 15 நாட்கள் வர வேண்டாம்!

மௌனி அமாவாசையில் ஷாஹி ஸ்நானம் ரத்து

கூட்ட நெரிசல் காரணமாக அனைத்து 13 அகாடாக்களும் ஷாஹி ஸ்நானத்தை ரத்து செய்துள்ளன. அடுத்த அமிர்த ஸ்நானம் வசந்த பஞ்சமியில் நடைபெறும். கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து 30 மிதக்கும் பாலங்களும் திறக்கப்பட்டன. பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்கு செல்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 'மௌனி அமாவாசை' இரண்டாவது ஷாஹி ஸ்நான நாள். மகா கும்பமேளாவின் பிற முக்கிய ஸ்நான நாட்கள் பிப்ரவரி 3 (பசந்த பஞ்சமி-மூன்றாவது ஷாஹி ஸ்நானம்), பிப்ரவரி 12 (மாசி பௌர்ணமி) மற்றும் பிப்ரவரி 26 (மகா சிவராத்திரி).

vuukle one pixel image
click me!
vuukle one pixel image