இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் பேசிய பிரதமர் மோடி.. இத்தாலி விடுதலை தினத்திற்கு வாழ்த்து..

By Ramya sFirst Published Apr 25, 2024, 9:33 PM IST
Highlights

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் பேசிய பிரதமர் மோடி, இத்தாலியின் விடுதலை தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இத்தாலி விடுதலை தினத்தின் 79வது ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மெலோனி மற்றும் இத்தாலி மக்களுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியின் புக்லியாவில் நடைபெறவிருக்கும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுத்ததற்கு பிரதமர் மோடி, மெலோனிக்கு நன்றி தெரிவித்தார். இத்தாலி தலைமையின் கீழ் G7 உச்சி மாநாட்டில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் முக்கியமான விளைவுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

மேலும் இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்திலும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பேச்னேன். இத்தாலி இன்று விடுதலை தினத்தை கொண்டாடும் வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். ஜூன் மாதம் G7 உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்தான்.. G7 மாநாட்டில் #G20இந்தியா விளைவுகளை முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நமது மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Spoke with PM and extended greetings as Italy celebrates its Liberation day today. Thanked her for the invite to the G7 Summit in June. Discussed taking forward outcomes at the G7. Reaffirmed commitment to deepening our Strategic Partnership.

— Narendra Modi (@narendramodi)

 

பிரதமர் மோடி கடைசியாக துபாயில் COP28 உச்சிமாநாட்டின் ஓரத்தில் மெலோனியைச் சந்தித்தார், அங்கு அவர் நிலையான, வளமான எதிர்காலத்திற்கான இந்தியா-இத்தாலி கூட்டு முயற்சிகளை எதிர்நோக்குவதாகக் கூறினார். இரு தலைவர்களுக்கு இடையே வளர்ந்து வரும் நட்பை பிரதிபலிக்கும் ஆன்லைன் போக்கு என்ற தலைப்புடன், இந்திய பிரதமருடன் மெலோனி தனது செல்ஃபியை வெளியிட்டார்.

இலவச லேப்டாப் திட்டம் பற்றிய தகவல் தவறானது: இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விளக்கம்

கடந்த ஆண்டு செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டையொட்டி மெலோனியும், பிரதமர் மோடியும் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு இத்தாலி அளித்த ஆதரவையும், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மற்றும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் இத்தாலி இணைவதையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

1985 வரை இந்தியாவில் பரம்பரை வரி இருந்தது.. ஆனால் அது ஏன் ரத்து செய்யப்பட்டது?

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்தியா-இத்தாலி வியூகக் கூட்டாண்மையின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து, பாதுகாப்பு மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். G7 மற்றும் G20 ஆகியவை உலகளாவிய நன்மைக்கு இசைவாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!