Rahul Gandhi : பங்குச்சந்தை ஊழல்.. காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு - பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி என்ன?

Ansgar R |  
Published : Jun 06, 2024, 08:56 PM IST
Rahul Gandhi : பங்குச்சந்தை ஊழல்.. காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு - பியூஷ் கோயல் கொடுத்த பதிலடி என்ன?

சுருக்கம்

Rahul Gandhi : தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடப்பட்டு, அதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பாஜக ஒருதலைப்பட்ச வெற்றியைப் பெறும் என்று வெளியான கருத்துக் கணிப்புகள் சதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர், அவர்களுக்காக பணிபுரியும் எக்சிட் போல்ஸ்டர்கள் மற்றும் நட்பு ஊடகங்கள் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய 'பங்குச் சந்தை ஊழலை' செய்ய சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டினார். 

மேலும் இந்த சதியால் 5 கோடி சிறு முதலீட்டாளர் குடும்பங்களின் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார். ஜே.பி.சி.யை அமைத்து, இந்த 'குற்றச் செயலை' விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் வெற்றிகரமான பணியால் நமது இந்திய முதலீட்டாளர்கள் பலன் அடைந்துள்ளனர் என்று செய்தியாளர் சந்திப்பில் பியூஷ் கோயல் கூறினார். இன்று நாடும், உலகமும் இந்தியா மீதும், மோடி மீதும் நம்பிக்கை வைத்திருப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார். 

பங்குச்சந்தையில் ஊழல்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

இன்று இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இன்று உலகமே இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதாரமாக ஏற்றுக்கொள்கிறது. தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று மோடி நாட்டுக்கு உறுதியளித்துள்ளார். மூன்றாவது முறையாக மோடி வருவதால் ராகுல் காந்தி கவலைப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் அவர் (ராகுல் காந்தி) தனது அறிக்கைகளால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை குழப்ப முயற்சிக்கிறார் என்றும் பியூஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

ராகுலின் பேச்சுக்கு பாஜகவின் பதிலடி 

ராகுலின் அறிக்கைகளை நிராகரித்த பாஜக, உண்மை என்னவென்றால், மே 31, 2024 முதல் ஜூன் 6, 2024 வரை BSE சென்செக்ஸ் 1149.96 புள்ளிகள், அதாவது 1.55% உயர்ந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் கடந்த 4 நாட்களில் சந்தையில் இருந்து சுமார் ரூ.7.5 டிரில்லியன் சம்பாதித்துள்ளனர். உண்மையில் சென்செக்ஸ் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக (89.5% ஜம்ப்) அதிகரித்துள்ளது. 

சென்செக்ஸ் 2019ல் 39000ல் இருந்து, 2024ல் 75000 ஆக வளர்ந்துள்ளது அதாவது CAGR சுமார் 14% சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது பதவிக்காலத்தை பங்குச் சந்தை கொண்டாடியதால், கடந்த இரண்டு அமர்வுகளில் (ஜூன் 5 மற்றும் 6) சென்செக்ஸ் 2,995 புள்ளிகள் மீண்டது. 

இதேபோல், செவ்வாய்க்கிழமை முதல் நிஃப்டி 937 புள்ளிகள் உயர்ந்தது. ஜூன் 4-ம் தேதி 72,079-ல் முடிவடைந்த சென்செக்ஸ், வியாழன் அன்று 75,074-ல் நிறைவடைந்தது. செவ்வாய்கிழமை 21,884ல் முடிந்த நிஃப்டி இன்று 22,821ல் முடிந்தது. இரண்டு அமர்வுகளில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் ரூ.21 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளனர்.

ஒரு பரிவர்த்தனை நடைபெறும் போது மட்டுமே சந்தையில் இருந்து லாபம் மற்றும் இழப்புகள் உணரப்படுகின்றன, இல்லையெனில் அது செல்வத்தை உருவாக்கும் முயற்சிகள் பற்றியது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், சந்தையில் எஃப்ஐஐ ஓட்டம் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தை உருவாக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இருந்த அவர்கள், தற்போது சில்லறை முதலீட்டாளர்களின் கனவை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று ராகுலை, பாஜக சாட்டியுள்ளது.

Kangana : சண்டிகர் ஏர்போர்ட்.. கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் CISF அதிகாரி மீது வழக்கு பதிவு - முழு விவரம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!