ஜம்முவில் 5 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு : 2 பிஎஃப் வீரர்கள் உட்பட 6 பேர் காயம்..

Published : Oct 27, 2023, 10:48 AM IST
ஜம்முவில் 5 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு : 2 பிஎஃப் வீரர்கள் உட்பட 6 பேர் காயம்..

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பிஎஸ்எஃப் வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அர்னியா மற்றும் சுசேத்கர் செக்டார்களில் உள்ள சர்வதேச எல்லையில் 5 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்(Border Security Force) மற்றும் பொதுமக்களில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச் சூடு இரவு 8 மணியளவில் அர்னியா செக்டார் பகுதியில் தொடங்கியதாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்முவின் அர்னியாவில் உள்ள உள்ளூர்வாசி ஒருவர் இதுகுறித்து பேசிய போது  "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மாலையில் தொடங்கியது. இதுபோன்ற சம்பவம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. எங்களுடன் குழந்தைகள் உள்ளனர், எனவே எல்லா வீடுகளிலும் பதுங்கு குழி இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காயமடைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவசிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். மேலும் BSF பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் பதவிகளுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மோட்டார் குண்டுகளை வீசியதாகவும், இது எல்லை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆர்னியா, சுச்ட்கர், சியா, ஜபோவால் மற்றும் ட்ரேவா ஆகிய சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அர்னியா மற்றும் ஜபோவால் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டர்.. 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஊடுருவல் முயற்சி தடுப்பு!

ஜம்முவில் உள்ள அர்னியா நகரில் வசிக்கும் தீபக் சவுத்ரி கூறுகையில், "நேற்று இரவு மோட்டார் ஷெல் தாக்குதலில் ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் எங்களை வாழ விடவில்லை. இந்த பகுதியில் 6மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன.” என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!