நான்கு மாநிலங்கள்... 19 இடங்கள்: என்.ஐ.ஏ. சோதனையால் பரபரப்பு!

Published : Dec 18, 2023, 11:36 AM IST
நான்கு மாநிலங்கள்... 19 இடங்கள்: என்.ஐ.ஏ. சோதனையால் பரபரப்பு!

சுருக்கம்

நாடு முழுவதும் 4 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஐஎஸ்ஐஎஸ் நெட்வொர்க் வழக்கு தொடர்பாக இன்று காலை நான்கு மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் பயங்கரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்கண்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிராவில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி 15 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

மிதக்கும் தென் மாவட்டங்கள்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!

கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தொகுதியின் தலைவர் ஆவார். அவர் புதிதாக ஆட்சேர்ப்பு செய்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, கணக்கில் வராத பணம், ஆயுதங்கள், கூர்மையான கருவிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!