அசாம் பதற்றமான மாநிலம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

Asianet News Tamil  
Published : May 06, 2017, 05:00 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
அசாம் பதற்றமான மாநிலம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

சுருக்கம்

New announcement about assam

அசாம் மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதன் அருகில் உள்ள மாநிலமான மேகாலயாவின் எல்லைப்பகுதியையும் பதற்றமான பகுதியாக தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உல்பா, என்டிஎப்பி ஆகிய அமைப்புக்களின் வன்முறை அதிகரித்துள்ளது.

இதனால், இந்த மாநிலம் அடுத்த 3 மாதங்களுக்கு பதற்றமான மாநிலமாக, மத்திய அரசுஅறிவித்துள்ளது.

மேலும், இந்த மாநிலத்தை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்து.

கடந்த 2016ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்ததன.

அதில் 4 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் கடத்தப்பட்டனர் என தெரிகிறது.

மேலும், நடப்பாண்டில் 9 வன்முறை சம்பவங்கள் நடந்துளளன. இதில், பாதுகாப்பு அதிகாரிகள் 2 உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!