மும்பை ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

Asianet News Tamil  
Published : Oct 26, 2017, 05:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
மும்பை ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

சுருக்கம்

Mumbai Rly station fire

மும்பை, பாந்த்ரா அருகே பெஹ்ராம்படாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

பாந்த்ரா ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு குடிசை பகுதியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து, அருகில் உள்ள ரயில் நிலையத்தையும் பாதித்தது. ரயில் நிலையத்தில் தீ பற்றியதை அடுத்து, 9 தீயணைப்பு வாகனங்கள், 7 ஜம்போ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இஸ்ரேல்-ஈரான் மோதல்..! சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல்..! தவிக்கும் இந்தியா..!
நாடு முழுவதும் திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை..! ரூ.2.35 வரை உயர்த்திய நிறுவனங்கள்..