இணையதளம் கொண்டாடும் நிஜ பாகுபலி இவர்தான்; அதிர்ச்சியில் உறைய வைக்கும் வைரல் வீடியோ!!

Published : Nov 26, 2022, 12:44 PM ISTUpdated : Nov 27, 2022, 10:58 AM IST
இணையதளம் கொண்டாடும் நிஜ பாகுபலி இவர்தான்; அதிர்ச்சியில் உறைய வைக்கும் வைரல் வீடியோ!!

சுருக்கம்

இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது தலையில் கனரக மோட்டார் சைக்கிளை தூக்கிச் செல்வதும், பின்னர் அந்த வாகனத்தை தலையில் சுமந்தவாறு பேருந்தில் ஏற்றுவது மாதிரியான வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலையில் கனரக மோட்டார் சைக்கிளை சுமந்து செல்லும் அந்த நபர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தை நோக்கி நடந்து செல்கிறார். தலையில் கனரக மோட்டார் சைக்கிளை சுமந்து செல்லும்போது, கையை சில வினாடிகள் எடுத்து விடுகிறார். அப்படியே பேருந்து மீது சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும் ஏணி முன்பு சில நொடிகள் நின்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். பின்னர் உடையும் நிலையில் இருக்கும் ஏணிப் படிக்கட்டுகளில் ஏறுகிறார். 

அப்போது அவர் மோட்டார் சைக்கிளை கைகளால் தாங்கிப் பிடிக்கவில்லை. தலையில் வைத்தவாறு படிகளில் ஏறி பேருந்தின் மேற்கூரையில் வெற்றிகரமாக வைக்கிறார். 

Watch : அல்ட்ரா வயலட் F77 இ-பைக் இந்தியாவில் அறிமுகம்! ஒரே சார்ஜில் 307கி.மீ பயணம்!

இந்த வீடியோ பகிரப்பட்ட 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த இணையவாசிகளை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 5.5 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். 

பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் தனது பதிவில், ''ஜார்கண்ட் ஆதிவாசியின் திறமை, ஜார்கண்டில் இருக்கும் கன்டாடோலி பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார். பலரும் அவரை, "சூப்பர்மேன்" என்று பதிவிட்டுள்ளனர். ''கழுத்து வலிமை எனக்கு தேவை'',  உண்மையான பாகுபலி'', "இது வீரமல்ல... அவர்கள் குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டிய நிர்பந்தம். ரிஸ்க் எடுத்தால்தான் அன்று அவர்கள் சாப்பிட முடியும்... அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்" என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

தென்னந்தோப்பிற்குள் 12 அடி நீள மலை பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த தோப்பின் உரிமையாளர்!!

எங்கு, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியாவிட்டாலும், இணையவாசிகள் இந்த வீடியோ ஜார்கண்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!