மாஃபியா பட பாணியில் போதைப்பொருள் தயாரிப்பு.. 2 சகோதரர்கள் பார்த்த பலே வேலை - சிக்கிய 100 கோடி மதிப்பிலான MD!

Ansgar R |  
Published : Oct 17, 2023, 06:45 PM IST
மாஃபியா பட பாணியில் போதைப்பொருள் தயாரிப்பு..  2 சகோதரர்கள் பார்த்த பலே வேலை - சிக்கிய 100  கோடி மதிப்பிலான MD!

சுருக்கம்

மஹாராஷ்டிராவில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்த, போதைப்பொருள் உற்பத்தி பிரிவில், போலீசார் சோதனை நடத்தியதில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரான் பிடிபட்டுள்ளது.

சிஞ்சோலி எம்ஐடிசியில் உள்ள அந்த போதைப்பொருள் தயாரிப்பு கிடங்கு, இரண்டு சகோதரர்களால் நடத்தப்பட்டு வந்தது என்றும், ராகுல் கிசான் கவாலி மற்றும் அவரது சகோதரர் அதுல் ஆகிய இருவரும் மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியான காரில் இருந்து சுமார் ரூ.10.17 கோடி மதிப்புள்ள 5.09 கிலோ மெபெட்ரோனுடன் கைது செய்யப்பட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

'மியாவ் மியாவ்' அல்லது MD என்றும் அழைக்கப்படும் Mephedrone, போதை மருந்து மற்றும் மனநோய் பொருள்கள் (NDPS) சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு செயற்கை தூண்டுதல் தரும் போதைப்பொருளாகும். (ஒரு சைக்கோட்ரோபிக் பொருள்). விசாரணையின் ஒரு பகுதியாக, சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோலி எம்ஐடிசியில் மூன்று ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுதா மூர்த்தி பெயரில் மோசடி: பெங்களூரு சாமியார் கைது!

சுமார் 16 கோடி மதிப்புள்ள உயர்தர மெபெட்ரோனை போலீசார் கைப்பற்றினர், அதே நேரத்தில் பதப்படுத்தப்படாத போதைப்பொருள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகும், கடத்தல் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஃபார்முலாக்கள் அடங்கிய டைரியும் அந்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது என்றார் அதிகாரி ஒருவர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அண்ட் சகோதரர்கள் இருவரும் தங்கள் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், அவர்கள் ஒரு ரசாயன தொழிற்சாலையில் சில ஆண்டுகளாக வேலை செய்துவந்துள்ளனர். பின்னர் 21,000 சதுர அடி பரப்பளவில், ஆய்வகங்கள் அமைக்க ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 7 மாதங்களாக அந்த யூனிட்டை நடத்தி வந்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு மாதத்திற்கு முன்பு மெபெட்ரோன் விநியோகிக்க, மும்பைக்கு வந்து உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சப்ளை செய்ததாக ஒரு அதிகாரி கூறினார். அவர்களின் உதவியாளர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இதற்கு முன்பு தானே நகரத்தைச் சேர்ந்த போலீசார், 2016 ஆம் ஆண்டில் அப்பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையை சோதனை செய்து சுமார் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டில் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நிர்வாண வீடியோவை காட்டி 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டிய நண்பர்கள்.. இன்ஸ்டா நட்பால் வந்த வினை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!