Lakhimpur Kheri violence case:உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் 4பேரை ஜீப்பில் மோதி நசுக்கி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
Lakhimpur Kheri violence case: உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் 4பேரை ஜீப்பில் மோதி நசுக்கி கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜெய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, லக்கிம்பூர் கெரி மாவட்டம், திகுனியா கிராமத்துக்கு வந்த உ.பி. துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி மத்திய அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ரா ஜீப் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் ஜீப்பில் அடிபட்டு 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.
டெல்லி ஜேஎன்யு-வில் பிரதமர் மோடி ஆவணப்படத்துக்குத் தடை: மாணவர்கள் போராட்டம், கல்வீச்சு
ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகன் ஓட்டிவந்த காரை தாக்கினர். இதில் பாஜக தொண்டர்கள் இருவர், ஒரு பத்திரிகையாளர், ஓட்டுநர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் காரில் இருந்தது மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என்பது தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆஷிஸ் மிஸ்ரா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆஷிஸ் மிஸ்ரா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை, கொலைச்சதி, கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருத்தல், மோட்டார்வாகனச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜேகே மகேஷ்வரி ஆகியோர் இந்த வழக்கில் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினர்.
என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை வரும் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.