மாநிலங்களில் காலியானது காங்கிரஸ்; பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் விமர்சனம்!!

Published : Apr 07, 2023, 03:59 PM IST
மாநிலங்களில் காலியானது காங்கிரஸ்; பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் விமர்சனம்!!

சுருக்கம்

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கிரண் குமார் ரெட்டி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஆந்திராவின் பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கிரண் குமார் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் முதல்வராக ஆந்திராவை ஆட்சி செய்து வந்தவர். ஆந்திராவை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்கினார். ஆனால், இதையடுத்து வந்த தேர்தல்களில் அவரால் பெரிய அளவில் வெற்றி வாய்ப்புக்களை பெற முடியவில்லை. இதையடுத்து, தாயக கட்சியான காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். ஆனாலும், பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பாஜக கட்சியில் இணைவதாக கடந்த மாதங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து நேற்று டெல்லி சென்று இருந்தார் கிரண் குமார் ரெட்டி. அங்கு பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி முன்பு பாஜக கட்சியில் இணைந்தார். 

தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

பாஜகவில் இணைந்த பின்னர் பேட்டியளித்த கிரண் குமார், ''பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரின் இணைப்பு நாட்டுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் பாஜகவில் சேர்ந்தேன். மாநிலத் தலைவர்களை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்வதில்லை. காங்கிரஸ் தலைமையின் தவறான நடவடிக்கையால் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள காங்கிரஸ் விரும்புவதில்லை'' என்றார்.

மேலும் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து அளித்த பேட்டியில், ''என்னுடைய ராஜா புத்திசாலி. அவர் சொந்தமாக சிந்திப்பதில்லை. யாருடைய ஆலோசனையையும் எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்..பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி.. பதறிய அதிகாரிகள் - இதுதான் காரணமா.!!

இன்னும் இவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. தமிழ்நாடு, செகந்திராபாத், கர்நாடகா என பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதால், இவர்களது சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!