பந்திபூரில் தண்ணீர் கொம்பன் யானை மரணம்! விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு!

Published : Feb 03, 2024, 10:24 AM ISTUpdated : Feb 03, 2024, 10:47 AM IST
பந்திபூரில் தண்ணீர் கொம்பன் யானை மரணம்! விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு!

சுருக்கம்

காட்டு யானையின் மரணம் குறித்து 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு விசாரணை நடத்தும் என கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் அறிவித்துள்ளார்.

கேரள வனத்துறை அதிகாரிகளால் ஊசி போட்டு பிடிக்கப்பட்ட தண்ணீர் கொம்பன் யானை சனிக்கிழமை காலை உயிரிழந்தது. வனத்துறையினர் தண்ணீர் கொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் பல மணிநேர போராட்டத்திற்குப் பின் மானந்தவாடியில் இருந்து பந்திப்பூரில் உள்ள ராமாபுரம் யானைகள் முகாமுக்கு இடமாற்றம் செய்தனர்.

யானையின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. யானை இறந்ததை கர்நாடக வனப் பாதுகாவலர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் குழு விரைவில் பந்திப்பூர் சென்றடைய உள்ளது.

யானையின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. யானைக்கு வேறு ஏதேனும் காயங்கள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்து வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக கால்நடை மருத்துவக் குழுக்கள் இணைந்து பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளும்.

பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!

காட்டு யானையின் மரணம் குறித்து 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழு விசாரணை நடத்தும் என கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் அறிவித்துள்ளார். முகாமில் நிபுணர்கள் பரிசோதனை நடைபெறுவதற்குள் யானை சரிந்து விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது மட்டுமே மருந்தின் அளவு குறித்த விவரங்கள் தெளிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் உறுதி கூறினார். யானை ஒப்படைக்கப்படும் வரை வெளிப்படையான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றும், உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானையிடம் சோர்வின் அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, யானை முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். பின்னர், பந்திப்பூரில் கொண்டு விடப்பட்ட யானைக்கு அங்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அய்யப்ப பக்தருக்கு அடித்த ஜாக்பாட்! சபரிமலை சென்றவருக்கு புத்தாண்டு லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு!

PREV
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி