Kerala guv vs CM row: ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த பின்னர் ஆடியோவை வெளியிட்ட கேரள ஆளுநர்!!

Published : Sep 19, 2022, 04:16 PM ISTUpdated : Sep 19, 2022, 04:47 PM IST
Kerala guv vs CM row: ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த பின்னர் ஆடியோவை வெளியிட்ட கேரள ஆளுநர்!!

சுருக்கம்

கேரள ஆளுநருக்கும், இடது ஜனநாயக அரசுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதுவரை இல்லாத நிகழ்வாக,  ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று 2019 ஆம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்வில் தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்பிங்கை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். 

ராஜ்பவன் ஆடிட்டோரியத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோவை ஆரிப் முகமது கான் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கே.கே.ராகேஷ் மேடையில் இருந்து இறங்கி வந்து காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதைக் காணலாம்.

2019-ம் ஆண்டு ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் கே.கே.ராகேஷ். பின்னர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலாளராக கே.கே.ராகேஷ் நியமிக்கப்பட்டார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் கவர்னர் சந்தித்துப் பேசியிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதல் சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார். பேட்டியில், ''ரோடு அமைப்பதற்கு பதிலாக, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பதிலாக, தங்களை எதிர்ப்பவர்களை அடக்குவதில் மாநில அரசு அக்கறை செலுத்தி வருகிறது. என்னுடைய அதிகாரத்தை குறைப்பதற்கு நீங்கள் யார்? எனக்கு அரசியலமைப்புச் சட்டம் அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. 

கறுப்புச் சட்டை அணிந்ததற்காக கைது செய்யப்படும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மக்கள் என்னை அணுகுவதை தடுப்பதற்கு போலீசார் முயற்சித்தனர். இது போன்ற சம்பவங்கள் (ஆளுநரை அடிப்பதற்கு சமம்) நடப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டினார். காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர் மற்றும் மக்கள் என்னை அணுகுவதைத் தடுத்தனர்.

Chandigarh University: ஆபாச வீடியோ விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழகம் மூடல்: காப்பாளர் சஸ்பெண்ட்,3 பேர் கைது

ஜெஎன்யு மற்றும் ஜமியா பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த போராட்டக்காரர்கள்தான் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பயிற்சி பள்ளிகளில் இவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்'' என்றார். 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்ட அமைச்சர் பி.ராஜீவ், ''மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியும், ஆனால் அது காலவரையின்றி இருக்க முடியாது, மேலும் அவற்றை நிராகரிக்கவும் முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, திரும்பப் பெறவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், மசோதாக்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை'' என்றார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த வாரம் மாநில சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை அனுமதிக்க முடியாது என்று கூறியதை அடுத்து, அது சட்டவிரோத மசோதாவை சட்டப்பூர்வமாக்குவதால்,  தகுதியற்ற உறவினர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வழி வகுக்கும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 

குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ. 1.5 கோடி நன்கொடை; உடன் வந்த எதிர்கால மருமகள்!!

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளத் துறையில் முதல்வர் பினராயி விஜயனின் மனைவியை தனிச் செயலாளராக நியமிக்க முயன்றதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. நேர்காணல் சுற்றில் அவர் மிகக் குறைந்த ஆராய்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தாலும், தேர்வு செயல்பாட்டில் அவர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவரை ரப்பர் ஸ்டாம்ப்பாக பயன்படுத்த முடியாது என ஆளுநர் கருத்து தெரிவித்து இருந்தார். .

கடும் எதிர்ப்புகள் மற்றும் யுடிஎப் உறுப்பினர்களின் புறக்கணிப்பை மீறி ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ஆம்  தேதிகளில் சர்ச்சைக்குரிய லோக்ஆயுக்தா (திருத்தம்) மற்றும் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாக்களை கேரள சட்டசபை நிறைவேற்றியது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!