"வங்கிகளே இல்லாத ஊர்களில் மக்கள் என்ன செய்வார்கள்" - கட்ஜு கடும் தாக்கு

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 04:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
"வங்கிகளே இல்லாத ஊர்களில் மக்கள் என்ன செய்வார்கள்" - கட்ஜு கடும் தாக்கு

சுருக்கம்

ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை திரும்பபெறும் அரசின் நடவடிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பெரும்பான்மையான மக்களிடம் ஆதரவு இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜு, இன்றைய பணவீக்கத்தில் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் முறை குறித்து விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான கிராமங்களில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த இந்த அரசின் ஸ்டண்டே ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு என்றும் விமர்ச்சித்துள்ளார். அதேபோல, அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மக்கள் வரவேற்பதில் இருந்தே 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே என்ற தனது முந்தைய கருத்து உறுதியாகியுள்ளதாகவும் கட்ஜு பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!
மீண்டும் ஒரு "லாக்டவுன்"! சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்.! உலகையே பதற வைக்கும் அமெரிக்கா