பிரபல தனியார் பள்ளியில் இதையுமா கத்து கொடுக்குறாங்க? வகுப்பறையிலேயே குடிமிபிடி சண்டை போடும் மாணவிகள்..!

By vinoth kumarFirst Published Aug 29, 2022, 1:30 PM IST
Highlights

பள்ளியின் வகுப்பறையில் மூன்று மாணவிகள் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பள்ளியின் வகுப்பறையில் மூன்று மாணவிகள் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது. 

இதையும் படிங்க;- செல்போனை பார்த்துகொண்டே மாணவிகள் மடியில் மாணவர்கள்.. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் வீடியோக்கள்..!

அதேபோல் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது ஆசிரியர்களை தாக்க முற்படுவது வகுப்பறையில் உள்ள இருக்கைகள் மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது படிக்கும் மாணவிகள் இப்படி நடந்து கொள்வதா? இளம் தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்று பெற்றோர்கள், பொதுமக்கள் ஆதங்கதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- எந்நேரமும் ஆபாச படம்.. டியூசன் வந்த பள்ளி மாணவர்களை கரெக்ட் செய்து ஆசிரியை உல்லாசம்.. வெளியான வீடியோ..!

இந்நிலையில், கான்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி சீருடையில் வகுப்பறைக்குளேயே மூன்று மாணவிகள் ஒருவரையொருவர் தலை முடியை  பிடித்து கொண்டு  ஆக்ரோஷமாக தாக்கி கொள்கின்றனர். இதனை சக மாணவிகள் சண்டையை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறார்கள். இதில், சிலர் சண்டையை விலக்கிவிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- பள்ளி அறையில் 3 மாணவிகள் தலைமுடி இழுத்து சண்டை; பகீர் வீடியோ!!

click me!