கான்பூரில் 17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் - தவறை மறைக்க நடந்த பலே வேலை!

Ansgar R |  
Published : Oct 31, 2023, 05:27 PM IST
கான்பூரில் 17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் - தவறை மறைக்க நடந்த பலே வேலை!

சுருக்கம்

லக்னோ: கான்பூரில் 17 வயது சிறுவன் ஒருவரை, அவருடைய ஆசிரியையின் காதலன் கொலைசெய்துவிட்டு, அதை மறைக்க நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் கான்பூர் நகரில் 17 வயது சிறுவன் ஒருவர் அவருடைய ஆசிரியையின் காதலன் கொலைசெய்துவிட்டு அதனை மறைக்க அந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு, சிறுவன் கடத்தப்பட்டதை போல ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளதாக போலீசார் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர். 

என்ன நடந்தது?

கான்பூரில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை, அச்சிறுவனின் டியூஷன் ஆசிரியை ரச்சிதாவின் காதலரான பிரபாத் சுக்லா, ஸ்டோர் ரூமுக்கு அழைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், சிறுவன் பிரபாத்தை தனது வீட்டிலிருந்து ஸ்டோர் ரூம் வரை அந்த கொலையாளி பின்தொடர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன் ஒட்டு கேட்பு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

பின்னர் பிரபாத் அந்த சிறுவனிடம் அவரது ஆசிரியை ரசிதா தன்னை அழைக்கிறார் என்றும், அதனால் தான் அவனை பின்தொடர்கிறேன் என்று கூறியுள்ளார். சிறுவனும், பிரபாத்தும் ஒன்றாக அந்த அறைக்குள் நுழைவதைக் CCTV காட்சிகளில் காணலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 20 நிமிடங்களுக்குப் பிறகு பிரபாத் மட்டுமே வெளியே வந்தார் என்றும், அந்த சிறுவன் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பிரதாப் சென்று திரும்பி பிறகு வேறு யாரும் அந்த அறைக்குள் நுழையவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்த அந்த சிறுவனின் ஸ்கூட்டரில் செல்வதையும் CCTV காட்சிகளில் காணமுடிகிறது என்று போலீசார் தெரிவித்தனர். 

இந்த வழக்கில் பிரபாத், 21 வயதான ரச்சிதா மற்றும் அவர்களது நண்பர் ஆர்யன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க பணம் தர வேண்டும் என்றும் போலியாக சிறுவனின் குடும்பத்துக்கு கடிதம் வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், கடிதம் வழங்கப்படுவதற்கு முன்பே சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!

கொலைக்கான காரணம் இப்பொது வரை அறியப்படவில்லை என்றும், சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மைகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி