போக்குவரத்து விமானங்களில் முக்கிய உற்பத்தியாளராக இந்தியா மாறும்… பிரதமர் மோடி நம்பிக்கை!!

Published : Oct 30, 2022, 05:38 PM IST
போக்குவரத்து விமானங்களில் முக்கிய உற்பத்தியாளராக இந்தியா மாறும்… பிரதமர் மோடி நம்பிக்கை!!

சுருக்கம்

விமானங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

விமானங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் ஆலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!!

வதோதராவில் சி-295 விமானங்கள் தயாரிப்பது நமது ராணுவத்திற்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்கும். போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக இந்தியா மாறும். இந்தியா இப்போது போக்குவரத்து விமானங்களின் முக்கிய உற்பத்தியாளராக மாறும்.

இதையும் படிங்க: குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் இந்தியாவை 'ஆத்மநிர்பர்' ஆக்குவதற்கு இரண்டு முக்கிய தூண்களாக இருக்கும். 2025ல், நமது பாதுகாப்பு உற்பத்தி அளவு 25 பில்லியன் டாலர்களை தாண்டும். உ.பி. மற்றும் தமிழகத்தில் நிறுவப்படும் பாதுகாப்பு தாழ்வாரங்கள் இந்த அளவிற்கு சக்தி அளிக்கும் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!