ஒற்றுமை சிலை! ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி !!

Published : Oct 30, 2022, 02:39 PM ISTUpdated : Oct 30, 2022, 02:41 PM IST
ஒற்றுமை சிலை! ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி !!

சுருக்கம்

அக்டோபர் 31 ஆம் தேதி (நாளை) நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

பிரதமரின் “ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்” என்ற தொலைநோக்கு பார்வையால் ஒவ்வொரு ஆண்டும் சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இது 2014 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த நாள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற பிற முக்கிய தேசிய கொண்டாட்டங்களுக்கு இணையாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அன்று பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒற்றுமை சிலையில் பிரதமர் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இது குடியரசு தினத்திற்கான கர்தவ்யா பாதை போன்றும், சுதந்திர தினத்திற்கான செங்கோட்டை போன்ற நினைவு மதிப்பை உருவாக்கி உள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த ஆண்டும், ஒற்றுமை சிலையில் நடைபெறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். இந்த கொண்டாட்டம் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அணிவகுப்புக்கு சாட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பிஎஸ்எப் (BSF) மற்றும் ஐந்து மாநில போலீஸ் படைகள், ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் ஒன்று அடங்கும். அம்பாஜி பழங்குடியின குழந்தைகளின் இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

பிரதமர் மோடி, கடந்த மாதம் அம்பாஜிக்கு அவர் சென்றிருந்தபோது, ​​இந்தக் குழந்தைகளை முன்னிறுத்திப் பாடியபோது அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில், பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!