சீனா, பாகிஸ்தானை எல்லையில் எதிர்கொள்ள பிரலே ஏவுகணை ரெடி; உள்நாட்டு தயாரிப்பில் அசத்தல்!!

Published : Nov 08, 2023, 11:15 AM IST
சீனா, பாகிஸ்தானை எல்லையில் எதிர்கொள்ள பிரலே ஏவுகணை ரெடி; உள்நாட்டு தயாரிப்பில் அசத்தல்!!

சுருக்கம்

விரைவில் இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் புதிய பிரலே ஏவுகணை சேர்க்கப்பட இருக்கிறது. 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பிரலே ஏவுகணை. தரையிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையான 'பிரலே' ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. 

இந்த ஏவுகணை 150 மீட்டர் தொலைவில் இருந்து 500 மீட்டர் வரை எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கக் கூடியது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்த இருநாடுகளின் எல்லையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

அது செக்ஸ் கல்வி... தப்பா எடுத்துக்க கூடாது: நிதிஷ் குமாருக்கு முட்டுக்கொடுக்கும் தேஜஸ்வி யாதவ்

சீனாவின் டாங் பெங் 12, ரஷ்யாவின் இஸ்கந்தர் ஏவுகணைகளைப் போன்று வலுவானது. ரஷ்யா இந்த ஏவுகணையைத் தான் தற்போது உக்ரைன் உடன் நடக்கும் போரில் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானும் எதிரி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை வைத்துள்ளது. 

பிரலே ஏவுகணை சோதனை எந்தவித இடையூறும், தொழில்நுட்பக் கோளாறும் இன்றி இலக்கை நோக்கி ஏவி சோதிக்கப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரலே ஏவுகணையின் பாதையானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் இலக்கு மற்றும் செயல்திறனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரலே ஏவுகணை 350-500 கிமீ குறுகிய தூர ஏவுகணையாகும். இது 500-1,000 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது. 

133 லேப்டாப்களைத் திருடிய ஹை-டெக் திருடன்! வலைவீசி சிக்க வைத்த பெங்களூரு போலீஸ்!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Kerala Politics: பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்! சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! முதல்வர் அதிரடி!