சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இந்தியா; சொல்லியே சாதித்தார் பிரதமர் மோடி!!

Published : Jun 10, 2023, 11:42 AM IST
சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இந்தியா; சொல்லியே சாதித்தார் பிரதமர் மோடி!!

சுருக்கம்

MyGovIndia தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 89.5 மில்லியன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  

உலக நாடுகளுடன் 2022 ஆம் ஆண்டில் நடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும் 46% நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 

ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் இடம் பெறுகிறது. பிரேசிலில் 29.2 மில்லியன் அளவிற்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது. சீனா 17.6 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் மூன்றாம் இடத்திலும், தாய்லாந்து 16.5 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் நான்காம் இடத்திலும், தென்கொரியா 8 மில்லியன் பண பரிவர்த்தனைகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது. 

உங்கள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரும்.. மத்திய அரசு அனுப்பும் பணம்! முழு விபரம் உள்ளே

MyGovIndia என்ற இணையதளம் மத்திய அரசின் கீழ் வருகிறது. மக்கள் இந்த இனையத்தில் தங்களது ஆலோசனைகளை வழங்கலாம். இந்தியா டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாடாக மாறி வருகிறது என்று பிரதமர் மோடி நடப்பாண்டின் துவக்கத்தில் கூறி இருந்தார். கிராமப்புற பொருளாதாரமும் மாறி வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ''டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில்தான் மொபைல் டேட்டாவும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இன்று கிராமப்புற பொருளாதாரம் பெரிய அளவில் மாறி வருகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.

Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் விலை குறைந்தது! வாங்க இதுதான் சரியான நேரம்

இதுகுறித்து சமீபத்தில் ஆர்பிஐ குறிப்பிட்ட இருந்த செய்தியிலும், இந்தியாவில் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது, இது பொருளாதாரத்தில் பிரதிபலித்து வருகிறது. மதிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் அளவில் மைல்கல்லை எட்டியுள்ளது என்று தெரிவித்து இருந்தது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!