சுதந்திர தின விழா.. பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையை கவனச்சீங்களா?

Published : Aug 15, 2023, 09:32 AM ISTUpdated : Aug 15, 2023, 11:18 AM IST
சுதந்திர தின விழா.. பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையை கவனச்சீங்களா?

சுருக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பல வண்ண ராஜஸ்தானி பந்தனி பிரிண்ட் தலைப்பாகையுடன் வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 2014 முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடி வண்ணமயமான தலைப்பாகை அணியும் பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பல வண்ண ராஜஸ்தானி பந்தனி பிரிண்ட் தலைப்பாகையுடன் வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார். பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரைக்காக, மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த தலைப்பாகையுடன் கூடிய கருப்பு நிற V-நெக் ஜாக்கெட்டையும் அணிந்திருந்தார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, பிரதமர் மோடி சிவப்பு வடிவங்கள் மற்றும் காவி தலைப்பாகை அணிந்திருந்தார். அதனுடன், அவர் ஒரு பாரம்பரிய குர்தா மற்றும் சுரிதார் அணிந்திருந்தார், அதற்குத் துணையாக நீல நிற ஜாக்கெட் மற்றும் ஸ்டோல் அணிந்திருந்தார்.

2022 ஆம் ஆண்டில், அவரது தலைப்பாகை தேசியக் கொடியின் சாயலை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. 2021 இல், அவர் சிவப்பு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட குங்குமப்பூ தலைப்பாகை அணிந்திருந்தார். 2020 ஆம் ஆண்டில், அவரது தலைப்பாகை காவி மற்றும் கிரீம் வண்ணங்களின் கலவையாக இருந்தது.

77வது சுதந்திர தினம், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021ல் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்வுகளில் பிரதமரின் உடையில் வண்ணமயமான தலைப்பாகைகள் வழக்கமான அம்சமாக உள்ளது.  ஒரு நிலையான பாரம்பரியத்தை பேணி, பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் வண்ணமயமான தலைப்பாகைகளை அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!