நான் ஒரு பூசாரி! அந்த கடவுள்களுக்கு தொண்டு செயவதே என் பணி: மோடி சொன்ன கடவுள் யார்?

First Published Dec 16, 2017, 9:28 PM IST
Highlights
I am a priest My task is to work for these gods Who is the God who said Modi


ஸ்கேட்டிங் கிரவுண்டு போல் வழுக்கிக் கொண்டு விரைகிறது வாழ்க்கை. நிற்கவும் நேரமில்லை, அமரவும் நேரமில்லை, பறக்கும் நிமிடங்களில் கிடைக்கும் ஓய்வு நொடிகளில் மளமளவென நீங்கள் வாசித்து மண்டையில் ஏற்றிக் கொள்ள இதோ சில துணுக்குகள்...
*    இத்தாலியில் நடைபெற்ற தங்களின் திருமணத்தின் புகைப்படங்களை ஒரு பத்திரிக்கைக்கு விற்று, அதில் கிடைத்த வருமானத்தை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்திருக்கிறது விராட் - அனுஷ் ஜோடி!
வாழ்த்துக்கள்.
*    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜனநாயகத்துக்கு உட்பட்ட யுக்திகளை தி.மு.க. செயல்படுத்தும் : 
- கனிமொழி
*    குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற இடத்தில் முதன் முறையாக ‘ஸீ பிளேன்’னில் பறந்து சிலிர்த்திருக்கிறார் மோடி
*    ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றிய பின்பு, 5 காளைகள் இறந்துள்ளன. காளைகளை அடக்க முயன்ற 15 பேர் இறந்துள்ளனர். 
- விலங்குகள் நல வாரியம். 
*    கோவை சிறையில் கவுசல்யாவின் அம்மா அன்னலட்சுமி தனக்கென ஒரு டீமை உருவாக்கிக் கொண்டு சுற்றினார். தனி ராஜ்ஜியம் நடத்தினார்.
-    ஹைட்ரோகார்பன் போராளி வளர்மதி
*    மம்மூட்டி ‘கசப’ படத்தில் பெண்களைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார்.
-    நடிகை பூ பார்வதி
*    மு.க.ஸ்டாலினுடைய அப்பாவே அவரை நம்பாததால்தான் அவருக்கு ‘செயல் தலைவர்’ பதவி மட்டும் கொடுத்திருக்கிறார். இவரை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்?
- எடப்பாடி பழனிசாமி
*    ஸ்டாலின் டீதான் குடிப்பார். ஆனால் நான் டீக்கடையே நடத்தியவன் 
-    ஓ.பன்னீர்செல்வம்
*    ஒக்கி புயல் பாதிப்பு நிலவரம் குறித்துப் பேச டெல்லி சென்றதன் மூலம் தமிழக முதல்வர் செய்ய வேண்டிய வேலையை கவர்னர் செய்திருக்கிறார். 
*    நாட்டிலுள்ள 125 கோடி மக்களும் எனது கடவுள். நான் அவரக்ளுக்கு பூஜை செய்யும் பூசாரி. நான் அவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்!
- பிரதமர் மோடி.
 

click me!